|

Naalaayira
Divya Prabhandam Part 3
nAlAyira divya pirapantam -part Ib ( 474- 947)
(in Tamil script, Unicode/utf-8 format)-
நாலாயிரத்
திவ்வியப்
பிரபந்தம்
(பாடல்கள் 474-
947)
This webpage presents the Etxt in Tamil script but in Unicode
encoding.
To view the Tamil text correctly you need to set up the
following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...)
installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or
Windows XP).
ii) Use a browser that is capable of handling UTF-8 based
pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font
chosen as the default font for the UTF-8 char-set/encoding
view.
C - Project Madurai 2002
Project Madurai is an open, voluntary, worldwide initiative
devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute
them free on the Internet.
Details of Project Madurai are available at the website
- http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided
this header page is kept intact.
நாலாயிரத்
திவ்வியப்
பிரபந்தம்
(பாடல்கள்
474- 947)
ஸ்ரீ
ஆண்டாள்
அருளிச்
செய்த
திருப்பாவை
அன்ன
வயற்புதுவை
ஆண்டாள்
அரங்கற்குப்
பன்னு
திருப்பாவைப்
பல்பதியம்
இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள்
நற்பாமாலை
பூமாலை
சூடிக்
கொடுத்தாளைச்
சொல்லு
சூடிக்
கொடுத்தாள்
சுடர்க்
கொடியே
தொல்பாவை
பாடி
அருளவல்ல
பல்வளையாய்
நாடி நீ
வேங்கடவற்கு
என்னை
விதி ஒன்ற
இம்மாற்றம்
நாங்கடவா
வண்ணமே
நல்கு.
474:
மார்கழித்
திங்கள்
மதி
நிறைந்த
நன்னாளால்
- நீராடப்
போதுவீர்
போதுமினோ
நேரிழையீர்
சீர்
மல்கும்
ஆய்ப்பாடிச்
செல்வச்
சிறுமீர்காள்
- கூர்வேல்
கொடுந்தொழிலன்
நந்தகோபன்
குமரன்
ஏரார்ந்த
கண்ணி
யசோதை
இளம்
சிங்கம்
- கார்
மேனி
செங்கண்
கதிர்
மதியம்
போல்
முகத்தான்
நாராயணனே
நமக்கே
பறை
தருவான்
- பாரோர்
புகழப்
படிந்தேலோர்
எம்பாவாய்
475:
வையத்து
வாழ்வீர்காள்
நாமும்
நம்பாவைக்குச்
- செய்யும்
கிரிசைகள்
கேளீரோ
பாற்கடலுள்
பையத்
துயின்ற
பரமனடி
பாடி
- நெய்யுண்ணோம்
பாலுண்ணோம்
நாட்காலே
நீராடி
மையிட்டு
எழுதோம்
மலரிட்டு
நாம்
முடியோம்
- செய்யாதன
செய்யோம்
தீக்குறளைச்
சென்றோதோம்
ஐயமும்
பிச்சையும்
ஆந்தனையும்
கை காட்டி
- உய்யுமாற்
எண்ணி
உகந்தேலோர்
எம்பாவாய்.
476:
ஓங்கி
உலகளந்த
உத்தமன்
பேர் பாடி
- நாங்கள்
நம்
பாவைக்குச்
சாற்றி
நீராடினால்
தீங்கின்றி
நாடெல்லாம்
திங்கள்
மும் மாரி
பெய்து
- ஓங்கு
பெறும்
செந் நெல்
ஊடு
கயலுகளப்
பூங்குவளைப்
போதில்
பொறி
வண்டு கண்
படுப்பத்
- தேங்காதே
புக்கிருந்து
சீர்த்த
முலை
பற்றி
வாங்க
குடம்
நிறைக்கும்
வள்ளல்
பெரும்
பசுக்கள்
- நீங்காத
செல்வம்
நிறைந்தேலோர்
எம்பாவாய்
477:
ஆழி மழைக்
கண்ணா
ஒன்று நீ
கை கரவேல்
- ஆழி உள்
புக்கு
முகந்து
கொடு
ஆர்த்து
ஏறி
ஊழி
முதல்வன்
உருவம்
போல் மெய்
கறுத்துப்
- பாழிய்
அம்
தோளுடைப்
பற்பனாபன்
கையில்
ஆழி போல்
மின்னி
வலம்புரி
போல்
நின்று
அதிர்ந்து
- தாழாதே
சார்ங்க
முதைத்த
சர மழை
போல்
வாழ
உலகினில்
பெய்திடாய்
நாங்களும்
- மார்கழி
நீராட
மகிழ்ந்தேலோர்
எம்பாவாய்
478:
மாயனை
மன்னு வட
மதுரை
மைந்தனைத்
- தூய பெரு
நீர்
யமுனைத்
துறைவனை
ஆயர்
குலத்தினில்
தோன்றும்
அணி
விளக்கைத்
- தாயைக்
குடல்
விளக்கம்
செய்த
தாமோதரனைத்
தூயோமாய்
வந்து
நாம்
தூமலர்
தூவித்
தொழுது
- வாயினால்
பாடி
மனத்தினால்
சிந்திக்கப்
போய
பிழையும்
புகுதருவான்
நின்றனவும்
- தீயினில்
தூசாகும்
செப்பேலோர்
எம்பாவாய்.
479:
புள்ளும்
சிலம்பின
காண்
புள்ளரையன்
கோயிலில்
- வெள்ளை
விளி
சங்கின்
பேரரவம்
கேட்டிலையோ
பிள்ளாய்
எழுந்திராய்
பேய் முலை
நஞ்சுண்டு
- கள்ளச்
சகடம்
கலக்கழியக்
காலோச்சி
வெள்ளத்தரவில்
துயிலமர்ந்த
வித்தினை
- உள்ளத்துக்
கொண்டு
முனிவர்களும்
யோகிகளும்
மெள்ள
எழுந்து
அரி என்ற
பேரரவம்
- உள்ளம்
புகுந்து
குளிர்ந்தேலோர்
எம்பாவாய்
480:
கீசு கீசு
என்று
எங்கும்
ஆனைச்
சாத்தான்
கலந்து
- பேசின
பேச்சரவம்
கேட்டிலையோ
பேய்ப்
பெண்ணே
காசும்
பிறப்பும்
கலகலப்பக்
கை
பேர்த்து
- வாச
நறும்
குழல்
ஆய்ச்சியர்
மத்தினால்
ஓசை
படுத்த
தயிரரவம்
கேட்டிலையோ
- நாயகப்
பெண்
பிள்ளாய்
நாராயணன்
மூர்த்தி
கேசவனைப்
பாடவும்
நீ கேட்டே
கிடத்தியோ
- தேசமுடையாய்
திறவேலோர்
எம்பாவாய்
481:
கீழ்
வானம்
வெள்ளென்று
எருமை
சிறு வீடு
- மேய்வான்
பரந்தன
காண்
மிக்குள்ள
பிள்ளைகளும்
போவான்
போகின்றாரைப்
போகாமல்
காத்து
உன்னைக்
- கூவுவான்
வந்து
நின்றோம்
கோதுகலம்
உடைய
பாவாய்
எழுந்திராய்
பாடிப்
பறை
கொண்டு
- மாவாய்
பிளந்தானை
மல்லரை
மாட்டிய
தேவாதி
தேவனைச்
சென்று
நாம்
சேவித்தால்
- ஆவாவென்று
ஆராய்ந்து
அருளேலோர்
எம்பாயாய்
482:
தூமணி
மாடத்து
சுற்றும்
விளக்கெரியத்
- தூபம்
கமழத்
துயிலணைமேல்
கண்
வளரும்
மாமான்
மகளே
மணிக்
கதவம்
தாழ்
திறவாய்
- மாமீர்
அவளை
எழுப்பீரோ
உன் மகள்
தான்
ஊமையோ
அன்றி
செவிடோ
அனந்தலோ
- ஏமப்
பெருந்
துயில்
மந்திரப்
பட்டாளோ
மாமாயன்
மாதவன்
வைகுந்தன்
என்றென்று
- நாமன்
பலவும்
நவின்றேலோர்
என்பாவாய்
483:
நோற்றுச்
சுவர்க்கம்
புகுகின்ற
அம்மனாய்.
- மாற்றமும்
தாராரோ
வாசல்
திறவாதார்
நாற்றத்
துழாய்
முடி
நாராயணன்
நம்மால்
- போற்றப்
பறை தரும்
புண்ணியனால்
பண்டு ஒரு
நாள்
கூற்றத்தின்
வாய்
வீழ்ந்த
கும்ப
கரணனும்
- தோற்றும்
உனக்கே
பெருந்துயில்
தான்
தந்தானோ
ஆற்ற
அனந்தல்
உடையாய்
அருங்கலமே
- தேற்றமாய்
வந்து
திறவேலோர்
எம்பாவாய்.
484:
கற்றுக்
கறவைக்
கணங்கள்
பல கறந்து
- செற்றார்
திறலழியச்
சென்று
செருச்
செய்யும்
குற்றம்
ஒன்றில்லாத
கோவலர்த்தம்
பொற்கொடியே
- புற்று
அரவு
அல்குல்
புனமயிலே
போதராய்
சுற்றத்து
தோழிமார்
எல்லாரும்
வந்து
நின்
- முற்றம்
புகுந்து
முகில்
வண்ணன்
பேர் பாட
சிற்றாதே
பேசாதே
செல்வ
பெண்டாட்டி
நீ
- எற்றுக்கு
உறங்கும்
பொருளேலோர்
எம்பாவாய்
485:
கனைத்து
இளம்
கற்றெருமை
கன்றுக்கு
இரங்கி
- நினைத்து
முலை
வழியே
நின்று
பால் சோர
நனைத்து
இல்லம்
சேறாக்கும்
நற்
செல்வன்
தங்காய்
- பனித்
தலை வீழ
நின்
வாசற் கடை
பற்றிச்
சினத்தினால்
தென்
இலங்கைக்
கோமானைச்
செற்ற
- மனத்துக்கு
இனியானைப்
பாடவும்
நீ வாய்
திறவாய்
இனித்தான்
எழுந்திராய்
ஈதென்ன
பேர்
உறக்கம்
- அனைத்து
இல்லத்தாரும்
அறிந்தேலோர்
எம்பாவாய்
486:
புள்ளின்
வாய்
கீண்டானைப்
பொல்லா
அரக்கனைக்
- கிள்ளிக்
களைந்தானைக்
கீர்த்தி
மை பாடிப்
போய்ப்
பிள்ளைகள்
எல்லாரும்
பாவைக்
களம்புக்கார்
- வெள்ளி
எழுந்து
வியாழம்
உறங்கிற்று
புள்ளும்
சிலம்பின
காண்
போதரிக்
கண்ணினாய்
- குள்ளக்
குளிரக்
குடைந்து
நீராடாதே
பள்ளிக்
கிடத்தியோ.
பாவாய். நீ
நன்
நாளால்
- கள்ளம்
தவிர்ந்து
கலந்தேலோர்
எம்பாவாய்.
487:
உங்கள்
புழக்கடைத்
தோட்டத்து
வாவியுள்
- செங்கழுனீர்
வாய்
நெகிழ்ந்து
ஆம்பல்
வாய்
கூம்பின
காண்
செங்கற்
பொடிக்
கூரை
வெண்பல்
தவத்தவர்
- தங்கள்
திருக்கோயில்
சங்கிடுவான்
போதன்றார்
எங்களை
முன்னம்
எழுப்புவான்
வாய்பேசும்
- நங்காய்
எழுந்திராய்
நாணாதாய்
நாவுடையாய்
சங்கோடு
சக்கரம்
ஏந்தும்
தடக்கையன்
- பங்கயக்
கண்ணானைப்
பாடேலோர்
எம்பாவாய்.
488:
எல்லே.
இளம்
கிளியே
இன்னம்
உறங்குதியோ
- சில்
என்று
அழையேன்
மின்
நங்கையீர்
போதருகின்றேன்
வல்லை உன்
கட்டுரைகள்
பண்டே உன்
வாய்
அறிதும்
- வல்லீர்கள்
நீங்களே
நானே தான்
ஆயிடுக
ஒல்லை நீ
போதாய்
உனக்கென்ன
வேறுடையை
- எல்லாரும்
போந்தாரோ
போந்தார்
போந்து
எண்ணிக்கொள்
வல் ஆனை
கொன்றானை
மாற்றாரை
மாற்றழிக்க
- வல்லானை
மாயனைப்
பாடேலோர்
எம்பாவாய்
489:
நாயகனாய்
நின்ற
நந்தகோபன்
உடைய
- கோயில்
காப்பானே.
கொடி
தோன்றும்
தோரண
வாயில்
காப்பானே.
மணிக்
கதவம்
தாள்
திறவாய்
- ஆயர்
சிறுமியரோமுக்கு
அறை பறை
மாயன் மணி
வண்ணன்
நென்னலே
வாய்
நேர்ந்தான்
- தூயோமாய்
வந்தோம்
துயில்
எழப்
பாடுவான்
வாயால்
முன்னம்
முன்னம்
மாற்றாதே
அம்மா. நீ
- நேய
நிலைக்
கதவம்
நீக்கேலோர்
எம்பாவாய்
490:
அம்பரமே
தண்ணீரே
சோறே அறம்
செய்யும்
- எம்பெருமான்
நந்தகோபாலா
எழுந்திராய்
கொம்பனார்க்கு
எல்லாம்
கொழுந்தே
குல
விளக்கே
- எம்பெருமாட்டி
யசோதாய்
அறிவுறாய்
அம்பரம்
ஊட
அறுத்து
ஓங்கி
உளகு
அளந்த
- உம்பர்
கோமானே
உறங்காது
எழுந்திராய்
செம் பொற்
கழலடிச்
செல்வா
பலதேவா
- உம்பியும்
நீயுன்
உறங்கேலோர்
எம்பாவாய்.
491:
உந்து மத
களிற்றன்
ஓடாத தோள்
வலியன்
- நந்தகோபன்
மருமகளே
நப்பின்னாய்
கந்தம்
கமழும்
குழலி கடை
திறவாய்
- வந்து
எங்கும்
கோழி
அழைத்தன
காண்
மாதவிப்
பந்தல்
மேல் பல்
கால்
குயிலினங்கள்
கூவின
காண்
- பந்து
ஆர் விரலி
உன்
மைத்துனன்
பேர்
பாடச்
செந்தாமரைக்
கையால்
சீரார்
வளை
ஒலிப்ப
- வந்து
திறவாய்
மகிழ்ந்தேலோர்
எம்பாவாய்.
492:
குத்து
விளக்கெரிய
கோட்டுக்
கால்
கட்டில்
மேல்
- மெத்தென்ற
பஞ்ச
சயனத்தின்
மேல்
ஏறிக்
கொத்தலர்
பூங்குழல்
நப்பினை
கொங்கை
மேல்
- வைத்துக்
கிடந்த
மலர்
மார்பா
வாய்
திறவாய்
மைத் தடம்
கண்ணினாய்
நீ உன்
மணாளனை
- எத்தனை
போதும்
துயிலெழ
ஒட்டாய்
காண்
எத்தனையேலும்
பிரிவு
ஆற்றகில்லாயால்
- தத்துவம்
அன்று
தகவேலோர்
எம்பாவாய்
493:
முப்பத்து
மூவர்
அமரர்க்கு
முன்
சென்று
- கப்பம்
தவிர்க்கும்
கலியே
துயில்
எழாய்
செப்பம்
உடையாய்
திறல்
உடையாய்
செற்றார்க்கு
- வெப்பம்
கொடுக்கும்
விமலா
துயில்
எழாய்
செப்பென்ன
மென்
முலைச்
செவ்வாய்ச்
சிறு
மருங்குல்
- நப்பின்னை
நங்காய்
திருவே
துயில்
எழாய்
உக்கமும்
தட்டொளியும்
தந்து உன்
மணாளனை
- இப்போதே
எம்மை
நீராட்டேலோர்
எம்பாவாய்
494:
ஏற்ற
கலங்கள்
எதிர்
பொங்கி
மீதளிப்ப
- மாற்றாதே
பால்
சொரியும்
வள்ளல்
பெரும்
பசுக்கள்
ஆற்றப்
படைத்தான்
மகனே
அறிவுறாய்
- ஊற்றம்
உடையாய்
பெரியாய்
உலகினில்
தோற்றமாய்
நின்ற
சுடரே
துயில்
எழாய்
- மாற்றார்
உனக்கு
வலி
தொலைந்து
உன் வாசற்
கண்
ஆற்றாது
வந்து உன்
அடி
பணியுமா
போலே
- போற்றியாம்
வந்தோம்
புகழ்ந்தேலோர்
எம்பாவாய்
495:
அம் கண் மா
ஞாலத்து
அரசர்
அபிமான
- பங்கமாய்
வந்து
நின்
பள்ளிக்
கட்டிற்
கீழே
சங்கம்
இருப்பார்
போல்
வந்து
தலைப்பெய்தோம்
- கிங்கிணி
வாய்ச்
செய்த
தாமரைப்
பூப் போலே
செங்கண்
சிறுச்
சிறிதே
எம்மேல்
விழியாவோ
- திங்களும்
ஆதித்தனும்
எழுந்தாற்
போல்
அம் கண்
இரண்டும்
கொண்டு
எங்கள்
மேல்
நோக்குதியேல்
- எங்கள்
மேல்
சாபம்
இழிந்தேலோர்
எம்பாவாய்
496:
மாரி மலை
முழைஞ்சில்
மன்னிக்
கிடந்து
உறங்கும்
- சீரிய
சிங்கம்
அறிவுற்றுத்
தீ
விழித்து
வேரி
மயிர்
பொங்க
எப்பாடும்
பேர்ந்து
உதறி
- மூரி
நிமிர்ந்து
முழங்கிப்
புறப்பட்டுப்
போதருமா
போலே நீ
பூவைப்பூ
வண்ணா உன்
- கோயில்
நின்று
இங்ஙனே
போந்தருளிக்
கோப்புடைய
சீரிய
சிங்காசனத்து
இருந்து
யாம் வந்த
- காரியம்
ஆராய்ந்து
அருளேலோர்
எம்பாவாய்
497:
அன்று இவ்
உலகம்
அளந்தாய்
அடி
போற்றி
- சென்றங்குத்
தென்
இலங்கை
செற்றாய்
திறல்
போற்றி
பொன்றச்
சகடம்
உதைத்தாய்
புகழ்
போற்றி
- கன்று
குணில்
ஆவெறிந்தாய்
கழல்
போற்றி
குன்று
குடையாய்
எடுத்தாய்
குணம்
போற்றி
- வென்று
பகை
கெடுக்கும்
நின்
கையில்
வேல்
போற்றி
என்றென்றும்
உன்
சேவகமே
ஏத்திப்
பறை
கொள்வான்
- இன்று
யாம்
வந்தோம்
இரங்கேலோர்
எம்பாவாய்
498:
ஒருத்தி
மகனாய்ப்
பிறந்து
ஓர்
இரவில்
- ஒருத்தி
மகனாய்
ஒளித்து
வளரத்
தரிக்கிலான்
ஆகித்
தான்
தீங்கு
நினைந்த
- கருத்தைப்
பிழைப்பித்துக்
கஞ்சன்
வயிற்றில்
நெருப்பென்ன
நின்ற
நெடுமாலே.,
உன்னை
- அருத்தித்து
வந்தோம்
பறை
தருதியாகில்
திருத்தக்க
செல்வமும்
சேவகமும்
யாம் பாடி
- வருத்தமும்
தீர்ந்து
மகிழ்ந்தேலோர்
எம்பாவாய்
499:
மாலே.
மணிவண்ணா.
மார்கழி
நீராடுவான்
- மேலையார்
செய்வனகள்
வேண்டுவன
கேட்டியேல்
ஞாலத்தை
எல்லாம்
நடுங்க
முரல்வன
- பால்
அன்ன
வண்ணத்து
உன் பாஞ்ச
சன்னியமே
போல்வன
சங்கங்கள்
போய்ப்
பாடுடையனவே
- சாலப்
பெரும்
பறையே
பல்லாண்டு
இசைப்பாரே
கோல
விளக்கே
கொடியே
விதானமே
- ஆலின்
இலையாய்
அருளேலோர்
எம்பாவாய்
500:
கூடாரை
வெல்லும்
சீர்
கோவிந்தா
உந்தன்னைப்
- பாடிப்
பறை
கொண்டு
யாம்
பெறும்
சம்மானம்
நாடு
புகழும்
பரிசினால்
நன்றாகச்
- சூடகமே
தோள்
வளையே
தோடே
செவிப்
பூவே
பாடகமே
என்றனைய
பலகலனும்
யாம்
அணிவோம்
- ஆடை
உடுப்போம்
அதன்
பின்னே
பாற் சோறு
மூட நெய்
பெய்து
முழங்கை
வழி வாரக்
- கூடி
இருந்து
குளிர்ந்தேலோர்
எம்பாவாய்
501:
கறவைகள்
பின்
சென்று
கானம்
சேர்ந்து
உண்போம்
- அறிவு
ஒன்றும்
இல்லாத
ஆய்க்
குலத்து
உந்தன்னைப்
பிறவி
பெறுந்தனைப்
புண்ணியம்
யாம்
உடையோம்
- குறை
ஒன்றும்
இல்லாத
கோவிந்தா
உந்தன்னோடு
உறவேல்
நமக்கு
இங்கு
ஒழிக்க
ஒழியாது
- அறியாத
பிள்ளைகளோம்
அன்பினால்
உந்தன்னை
சிறு பேர்
அழைத்தனமும்
சீறி
அருளாதே
- இறைவா நீ
தாராய்
பறையேலோர்
எம்பாவாய்
502:
சிற்றம்
சிறு காலே
வந்து
உன்னை
சேவித்து
உன்
- பொற்றாமரை
அடியே
போற்றும்
பொருள்
கேளாய்
பெற்றம்
மேய்த்து
உண்ணும்
குலத்தில்
பிறந்து
நீ
- குற்று
ஏவல்
எங்களைக்
கொள்ளாமல்
போகாது
இற்றைப்
பறை
கொள்வான்
அன்று
காண்
கோவிந்தா
- எற்றைக்கும்
ஏழ் ஏழ்
பிறவிக்கும்
உன்
தன்னோடு
உற்றோமே
ஆவோம்
உனக்கே
நாம்
ஆட்செய்வோம்
- மற்றை
நம்
காமங்கள்
மாற்றேலோர்
எம்பாவாய்
503:
வங்கக்
கடல்
கடைந்த
மாதவனை
கேசவனை
- திங்கள்
திருமுகத்து
சேய்
இழையார்
சென்று
இறைஞ்சி
அங்கப்
பறை கொண்ட
ஆற்றை அணி
புதுவைப்
- பைங்கமலத்
தண்
தெரியல்
பட்டர்
பிரான்
கோதை-
சங்கத்
தமிழ்
மாலை
முப்பதும்
தப்பாமே (-சொன்ன
- இங்கு
இப்பரிசுரைப்பார்
ஈரிரண்டு
மால் வரை
தோள்
செங்கண்
திருமுகத்துச்
செல்வத்
திருமாலால்
- எங்கும்
திருவருள்
பெற்று
இன்புறுவர்
எம்பாவாய்.
கோதை
பிறந்த
ஊர்
கோவிந்தன்
வாழுமூர்
- சோதி மணி
மாடம்
தோன்றும்
ஊர்
நீதியால்
நல்ல
பத்தர்
வாழும்
ஊர்
நான்மறைகள்
ஓதுமூர்
- வில்லிபுத்தூர்
வேதக்
கோனூர்
பாதகங்கள்
தீர்க்கும்
பரமன் அடி
காட்டும்
- வேதம்
அனைத்துக்கும்
வித்தாகும்
கோதை
தமிழ்
ஐயைந்தும்
ஐந்தும்
அறியாத
மானிடரை
- வையம்
சுமப்பது
வம்பு.
திருவாடிப்
பூரத்து
செகத்துதித்தாள்
வாழியே
- திருப்பாவை
முப்பதும்
செப்பினாள்
வாழியே
பெரியாழ்வார்
பெற்றெடுத்த
பெண்
பிள்ளை
வாழியே
- பெரும்புதூர்
மாமுனிக்குப்
பின்னானாள்
வாழியே
ஒரு
நூற்று
நாற்பத்து
மூன்றுரைத்தாள்
வாழியே
- உயரரங்கற்கே
கண்ணியுகந்தருளிதாள்
வாழியே
மருவாரும்
திருமல்லி
வள நாடி
வாழியே
- வண்புதுவை
நகர்க்
கோதை
மலர்ப்
பதங்கள்
வாழியே
ஸ்ரீ
ஆண்டாள்
திருவடிகளே
சரணம்.
மங்களம்
ஸ்ரீ:
ஸ்ரீமதே
ராமானுஜாய
நம:
நாச்சியார்
திருமொழித்
தனியன்கள்
திருக்கண்ணமங்கையாண்டான்
அருளியது
நேரிசை
வெண்பா
அல்லிநாட்
டாமரைமே
லாரணங்கி
னின்துணைவி
மல்லிநா
டாண்ட
மடமயில் -
மெல்லியலாள்,
ஆயர்
குலவேந்த
னாகத்தாள்,
தென்புதுவை
வேயர்
பயந்த
விளக்கு.
கட்டளைக்
கலித்துறை
கோலச்
சுரிசங்கை
மாயஞ்செவ்
வாயின்
குணம்வினவும்
சீலத்
தனள்,தென்
திருமல்லி
நாடி,
செழுங்குழல்மேல்
மாலத்
தொடைதென்
னரங்கருக்
கீயும்
மதிப்புடைய
சோலைக்
கிளி,அவள்
தூயநற்
பாதம்
துணைநமக்கே.
ஸ்ரீ:
ஆண்டாள்
அருளிச்செய்த
நாச்சியார்
திருமொழி
1: தையொரு
திங்கள்
அறுசீர்க்
கழிநெடிலடி
ஆசிரிய
விருத்தம்
504:
தையொரு
திங்களும்
தரைவிளக்கித்
- தண்மண்
டலமிட்டு
மாசிமுன்னாள்,
ஐயநுண்
மணற்கொண்டு
தெருவணிந்து
- அழகினுக்
கலங்கரித்
தனங்கதேவா,
உய்யவு
மாங்கொலோ
வென்றுசொல்லி
- உன்னையு
மும்பியை
யும்தொழுதேன்,
வெய்யதோர்
தழலுமிழ்
சக்கரக்கை
- வேங்கட
வற்கென்னை
விதிக்கிற்றியே.
(2) 1
505:
வெள்ளைநுண்
மணற்கொண்டு
தெருவணிந்து
- வெள்வரைப்
பதன்முன்னம்
துறைபடிந்து,
முள்ளுமில்
லாச்சுள்ளி
யெரிமடுத்து
- முயன்றுன்னை
நோற்கின்றேன்
காமதேவா,
கள்ளவிழ்
பூங்கணை
தொடுத்துக்கொண்டு
- கடல்வண்ண
னென்பதோர்
பேரெழுதி,
புள்ளினை
வாய்பிளந்
தானென்பதோர்
- இலக்கினில்
புகவென்னை
யெய்கிற்றியே.
2
506:
மத்தநன்
னறுமலர்
முருக்கமலர்
- கொண்டுமுப்
போதுமுன்
னடிவணங்கி,
தத்துவ
மிலியென்று
நெஞ்செரிந்து
- வாசகத்
தழித்துன்னை
வைதிடாமே,
கொத்தலர்
பூங்கணை
தொடுத்துக்கொண்டு
- கோவிந்த
னென்பதோர்
பேரேழுதி,
வித்தகன்
வேங்கட
வாணனென்னும்
- விளக்கினில்
புகவென்னை
விதிக்கிற்றியே.
3
507:
சுவரில்
புராணநின்
பேரேழுதிச்
- சுறவநற்
கொடிகளும்
துரங்கங்களும்,
கவரிப்
பிணாக்களும்
கருப்புவில்லும்
- காட்டித்தந்
தேன்கண்டாய்
காமதேவா,
அவரைப்
பிராயந்
தொடங்கிஎன்றும்
- ஆதரித்
தெழுந்தவென்
தடமுலைகள்,
துவரைப்
பிரானுக்கே
சங்கற்பித்துத்
- தொழுதுவைத்
தேனொல்லை
விதிக்கிற்றியே.
4
508:
வானிடை
வாழுமவ்
வானவர்க்கு
- மறையவர்
வேள்வியில்
வகுத்தஅவி,
கானிடைத்
திரிவதோர்
நரிபுகுந்து
- கடப்பதும்
மோப்பதும்
செய்வதொப்ப,
ஊனிடை
யாழிசங்
குத்தமர்க்கென்று
- உன்னித்
தெழுந்தவென்
தடமுலைகள்,
மானிட
வர்க்கென்று
பேச்சுப்படில்
- வாழகில்
லேன்கண்டாய்
மன்மதனே. 5
509:
உருவுடை
யாரிளை
யார்கள்நல்லார்
- ஓத்துவல்
லார்களைக்
கொண்டு,வைகல்
தெருவிடை
யெதிர்கொண்டு
பங்குனிநாள்
- திருந்தவே
நோற்கின்றேன்
காமதேவா,
கருவுடை
முகில்வண்ணன்
காயாவண்ணன்
- கருவிளை
போல்வண்ணன்,
கமலவண்ணத்
திருவுடை
முகத்தினில்
திருக்கண்களால்
- திருந்தவே
நோக்கெனக்
கருளுகண்டய்.
6
510:
காயுடை
நெல்லொடு
கரும்பமைத்துக்
- கட்டி
யரிசி
யவலமைத்து,
வாயுடை
மறையவர்
மந்திரத்தால்
- மன்மத னே.உன்னை
வணங்குகின்றேன்,
தேயமுன்
னளந்தவன்
திரிவிக்கிரமன்
- திருக்கைக
ளாலென்னைத்
தீண்டும்வண்ணம்,
சாயுடை
வயிறுமென்
தடமுலையும்
- தரணியில்
தலைப்புகழ்
தரக்கிற்றியே.
7
511:
மாசுடை
யுடம்பொடு
தலையுலறி
- வாய்ப்புரம்
வெளுத்தொரு
போதுமுண்டு,
தேசுடை
திறலுடைக்
காமதேவா.
- நோற்கின்ற
நோன்பினைக்
குறிக்கொள்கண்டாய்,
பேசுவ
தொன்றுண்டிங்
கெம்பெருமான்
- பெண்மையைத்
தலையுடைத்
தாக்கும்வண்ணம்
கேசவ
நம்பியைக்
கால்பிடிப்பாள்
- என்னுமிப்
பேறெனக்
கருளுகண்டாய்.
8
512:
தொழுதுமுப்
போதுமுன்
னடிவணங்கித்
- தூமலர்
தூய்த்தொழு
தேத்துகின்றேன்,
பழுதின்றிப்
பாற்கடல்
வண்ணனுக்கே
- பணிசெய்து
வாழப்
பெறாவிடில்நான்,
அழுதழு
தலமந்தம்
மாவழங்க
- ஆற்றவு
மதுவுனக்
குறைக்குங்கண்டாய்,
உழுவதோ
ரெருத்தினை
நுகங்கொடுபாய்ந்து
- ஊட்டமின்
றித்துரந்
தாலொக்குமே.
9
513:
கருப்புவில்
மலர்க்கணைக்
காமவேளைக்
- கழலிணை
பணிந்தங்கோர்
கரியலற,
மருப்பினை
யொசித்துப்புள்
வாய்பிளந்த
- மணிவண்ணற்
கென்னை
வகுத்திடென்று,
பொருப்பன்ன
மாடம்பொ
லிந்துதோன்றும்
- புதுவையர்
கோன்விட்டு
சித்தன்கோதை,
விருப்புடை
யின்தமிழ்
மாலைவல்லார்
- விண்ணவர்
கோனடி
நண்ணுவரே.
(2) 10
2:
நாமமாயிரம்
கலி
விருத்தம்
514:
நாமமாயிர
மேத்தநின்ற
- நாராயணாநர
னே,உன்னை
மாமிதன்மக
னாகப்பெற்றா
- லெமக்குவாதை
தவிருமே,
காமன்போதரு
காலமென்றுபங்
- குனிநாள்கடை
பாரித்தோம்,
தீமைசெய்யும்
சிரீதரா.எங்கள்
- சிற்றில்வந்து
சிதையேலே.
(2) 1
515:
இன்றுமுற்றும்
முதுகுநோவ
- இருந்திழைத்தஇச்
சிற்றிலை,
நன்றும்கண்ணுற
நோக்கிநாங்கொளும்
- ஆர்வந்தன்னைத்
தணிகிடாய்,
அன்றுபாலக
னாகியாலிலை
- மேல்துயின்றவெம்
மாதியாய்,
என்றுமுன்றனக்
கெங்கள்மேலிரக்
- கம்மெழாததெம்
பாவமே. 2
516:
குண்டுநீருறை
கோளரீ.மத
- யானைகோள்விடுத்
தாய்,உன்னைக்
கண்டுமாலுறு
வோங்களைக்கடைக்
- கண்களாலிட்டு
வாதியேல்,
வண்டல்நுண்மணல்
தெள்ளியாம்வளைக்
- கைகளால்சிர
மப்பட்டோ
ம்,
தெண்டிரைக்கடற்
பள்ளியாய்.எங்கள்
- சிற்றில்வந்து
சிதையேலே.
3
517:
பெய்யுமாமுகில்
போல்வண்ணா.உன்றன்,
- பேச்சும்செய்கையும்,
எங்களை
மையலேற்றி
மயக்கவுன்முகம்
- மாயமந்திரந்
தான்கொலோ,
நொய்யர்பிள்ளைக
ளென்பதற்குன்னை
- நோவநாங்களு
ரைக்கிலோம்,
செய்யதாமரைக்
கண்ணினாயெங்கள்
- சிற்றில்வந்து
சிதையேலே.
4
518:
வெள்ளைநுண்மணல்
கொண்டுசிற்றில்
- விசித்திரப்பட,
வீதிவாய்த்
தெள்ளிநாங்களி
ழைத்தகோல
- மழித்தியாகிலும்,
உன்றன்மேல்
உள்ளமோடி
யுருகலல்லால்
- உரோடமொன்று
மிலோங்கண்டாய்,
கள்ளமாதவா.
கேசவா.உன்
- முகத்தனகண்க
ளல்லவே. 5
519:
முற்றிலாதபிள்
ளைகளோம்முலை
- போந்திலாதோமை,
நாடொறும்
சிற்றில்மேலிட்டுக்
கொண்டுநீசிறி
- துண்டுதிண்ணென
நாமது
கற்றிலோம்,கட
லையடைத்தரக்-
- கர்குலங்களை
முற்றவும்
செற்று,இலங்கையைப்
பூசலாக்கிய
- சேவகா.எம்மை
வாதியேல்.
6
520:
பேதநன்கறி
வார்களோடிவை
- பேசினால்பெரி
திஞ்சுவை,
யாதுமொன்றறி
யாதபிள்ளைக
- ளோமைநீநலிந்
தென்பயன்,
ஓதமாகடல்
வண்ணா.உன்மண
- வாட்டிமாரொடு
சூழறும்,
சேதுபந்தம்
திருத்தினாயெங்கள்
- சிற்றில்வந்து
சிதையேலே.
7
521:
வட்டவாய்ச்சிறு
தூதையோடு
- சிறுசுளகும்மண
லுங்கொண்டு,
இட்டமாவிளை
யாடுவோங்களைச்
- சிற்றிலீடழித்
தென்பயன்,
தொட்டுதைத்துநலி
யேல்கண்டாய்சுடர்ச்
- சக்கரம்கையி
லேந்தினாய்,
கட்டியும்கைத்
தாலின்னாமை
- அறிதியேகடல்
வண்ணனே. 8
522:
முற்றத்தூடு
புகுந்துநின்முகங்
- காட்டிப்புன்முறு
வல்செய்து,
சிற்றிலோடெங்கள்
சிந்தையும்சிதைக்
- கக்கடவையோ
கோவிந்தா,
முற்றமண்ணிடம்
தாவிவிண்ணுற
- நீண்டளந்துகொண்
டாய்,எம்மைப்-
பற்றிமெய்ப்பிணக்
கிட்டக்காலிந்தப்
- பக்கம்நின்றவ
ரெஞ்சொல்லார்?
9
523:
சீதைவாயமு
தமுண்டாய்.எங்கள்
- சிற்றில்நீசிதை
யேல்.
என்று,
வீதிவாய்விளை
யாடுமாயர்
- சிறுமியர்மழ
லைச்சொல்லை,
வேதவாய்த்தொழி
லார்கள்வாழ்வில்லி
- புத்தூர்மன்விட்டு
சித்தன்றன்,
கோதைவாய்த்தமிழ்
வல்லவர்குறை
- வின்றிவைகுந்தம்
சேர்வரே. 2 10
3:
கோழியழைப்பதன்
524:
கோழி
யழைப்பதன்
முன்னம்
- குடைந்துநீ
ராடுவான்
போந்தோம்,
ஆழியஞ்
செல்வ
னெழுந்தான்
- அரவணை
மேல்பள்ளி
கொண்டாய்,
ஏழைமை
யாற்றவும்
பட்டோ ம்
- இனியென்றும்
பொய்கைக்கு
வாரோம்,
தோழியும்
நானும்
தொழுதோம்
- துகிலைப்
பணித்தரு
ளாயே. (2) 1
525:
இதுவென்
புகுந்ததிங்
கந்தோ.
- இப்பொய்கைக்
கெவ்வாறு
வந்தாய்,
மதுவின்
துழாய்முடி
மாலே.
- மாயனே.எங்க
ளமுதே,
விதியின்மை
யாலது
மாட்டோ ம்
- வித்தகப்
பிள்ளாய்.
விரையேல்,
குதிகொண்
டரவில்
நடித்தாய்.
- குருந்திடைக்
கூறை
பணியாய். 2
526:
எல்லே
யீதென்ன
இளமை
- எம்மனை
மார்காணி
லொட்டார்,
பொல்லாங்கீ
தென்று
கருதாய்
- பூங்குருந்
தேறி
யிருத்தி,
வில்லாலி
லங்கை
யழித்தாய்.நீ
- வேண்டிய
தெல்லாம்
தருவோம்,
பல்லாரும்
காணாமே
போவோம்
- பட்டைப்
பணித்தரு
ளாயே. 3
527:
பரக்க
விழித்தெங்கும்
நோக்கிப்
- பலர்குடைந்
தாடும்
சுனையில்,
அரக்கநில்
லாகண்ண
நீர்கள்
- அலமரு
கின்றவா
பாராய்,
இரக்கமே
லொன்று
மிலாதாய்.
- இலங்கை
யழித்த
பிரானே,
குரக்கர
சாவ
தறிந்தோம்
- குருந்திடைக்
கூறை
பணியாய். 4
528:
காலைக்
கதுவிடு
கின்ற
- கயலோடு
வாளை
விரவி,
வேலைப்
பிடித்தெந்னை
மார்கள்
- ஓட்டிலென்
னவிளை
யாட்டோ ,
கோலச்சிற்
றாடை
பலவுங்
- கொண்டுநீ
யேறி
யிராதே,
கோலங்
கரிய
பிரானே.
- குருந்திடைக்
கூறை
பணியாய். 5
529:
தடத்தவிழ்
தாமரைப்
பொய்கைத்
- தாள்களெங்
காலைக்
கதுவ,
விடத்தே
ளெறிந்தாலே
போல
- வேதனை
யற்றவும்
பட்டோ ம்
குடத்தை
யெடுத்தேற
விட்டுக்
- கூத்தாட
வல்லஎங்
கோவே,
படிற்றையெல்
லாம்தவிர்ந்
தெங்கள்
- பட்டைப்
பணித்தரு
ளாயே. 6
530:
நீரிலே
நின்றயர்க்
கின்றோம்
- நீதியல்
லாதன
செய்தாய்,
ஊரகம்
சாலவும்
சேய்த்தால்
- ஊழியெல்
லாமுணர்
வானே,
ஆர்வ
முனக்கே
யுடையோம்
- அம்மனை
மார்காணி
லொட்டார்,
போர
விடாயெங்கள்
பட்டைப்
- பூங்குருந்
தேறியி
ராதே. 7
531:
மாமிமார்
மக்களே
யல்லோம்
- மற்றுமிங்
கெல்லாரும்
போந்தார்,
தூமலர்க்
கண்கள்
வளரத்
- தொல்லையி
ராத்துயில்
வானே,
சேமமே
லன்றிது
சாலச்
- சிக்கென
நாமிது
சொன்னோம்,
கோமள
ஆயர்கொ
ழுந்தே.
- குருந்திடைக்
கூறை
பணியாய். 8
532:
கஞ்சன்
வலைவைத்த
வன்று
- காரிரு
ளெல்லில்
பிழைத்து,
நெஞ்சுதுக்
கம்செய்யப்
போந்தாய்
- நின்றஇக்
கன்னிய
ரோமை,
அஞ்ச
உரப்பாள்
அசோதை
- ஆணாட
விட்டிட்
டிருக்கும்,
வஞ்சகப்
பேய்ச்சிபா
லுண்ட
- மசிமையி
லீ.கூறை
தாராய். 9
533:
கன்னிய
ரோடெங்கள்
நம்பி
- கரிய
பிரான்விளை
யாட்டை,
பொன்னியல்
மாடங்கள்
சூழ்ந்த
- புதுவையர்
கோன்பட்டன்
கோதை,
இன்னிசை
யால்சொன்ன
மாலை
- ஈரைந்தும்
வல்லவர்
தாம்போய்,
மன்னிய
மாதவ னோடு
- வைகுந்தம்
புக்கிருப்
பாரே. 2 10
4:
தெள்ளியார்
பலர்
கலி
விருத்தம்
534:
தெள்ளி
யார்பலர்
கைதொழும்
தேவனார்,
வள்ளல்
மாலிருஞ்
சோலை
மணாளனார்,
பள்ளி
கொள்ளு
மிடத்தடி
கொட்டிட,
கொள்ளு
மாகில்நீ
கூடிடு
கூடலே. 1
535:
காட்டில்
வேங்கடம்
கண்ண
புரநகர்,
வாட்ட
மின்றி
மகிழ்ந்துறை
வாமனன்,
ஓட்ட
ராவந்தென்
கைப்பற்றி,
தன்னோடும்
கூட்டு
மாகில்நீ
கூடிடு
கூடலே. (2) 2
536:
பூம
கன்புகழ்
வானவர்
போற்றுதற்
காம கன்,அணி
வாணுதல்
தேவகி
மாம கன்,மிகு
சீர்வசு
தேவர்தம்,
கோம
கன்வரில்
கூடிடு
கூடலே. 3
537:
ஆய்ச்சி
மார்களு
மாயரு
மஞ்சிட,
பூத்த
நீள்கடம்
பேறிப்
புகப்பாய்ந்து,
வாய்த்த
காளியன்
மேல்நட
மாடிய,
கூத்த
னார்வரில்
கூடிடு
கூடலே. 4
538:
மாட
மாளிகை
சூழ்மது
ரைப்பதி
நாடி,
நந்தெரு
வின்நடு
வேவந்திட்டு,
ஓடை மாமத
யானை
யுதைத்தவன்,
கூடு
மாகில்நீ
கூடிடு
கூடலே. 5
539:
அற்ற
வன்மரு
தம்முறி
யநடை
கற்ற வன்,கஞ்
சனைவஞ்
சனையினால்
செற்ற வன்,திக
ழும்மது
ரைப்பதி,
கொற்ற
வன்வரில்
கூடிடு
கூடலே. 6
540:
அன்றின்
னாதன
செய்சிசு
பாலனும்,
நின்ற
நீள்மரு
தும்மெரு
தும்புள்ளும்,
வென்றி
வேல்விறற்
கஞ்சனும்
வீழ,முன்
கொன்ற
வன்வரில்
கூடிடு
கூடலே. 7
541:
ஆவ லன்புட
யார்தம்
மனத்தன்றி
மேவ லன்,விரை
சூழ்துவ
ராபதிக்
காவ லன்,கன்று
மேய்த்து
விளையாடும்,
கோவ
லன்வரில்
கூடிடு
கூடலே. 8
542:
கொண்ட
கோலக்
குறளுரு
வாய்ச்சென்று,
பண்டு
மாவலி
தன்பெரு
வேள்வியில்,
அண்ட
மும்நில
னும்அடி
யொன்றினால்,
கொண்ட
வன்வரில்
கூடிடு
கூடலே. 9
543:
பழகு
நான்மறை
யின்பொரு
ளாய்,மதம்
ஒழுகு
வாரண
முய்ய
வளித்த,எம்
அழக னாரணி
யாய்ச்சியர்
சிந்தையுள்,
குழக
னார்வரில்
கூடிடு
கூடலே. 10
544:
ஊடல் கூட
லுணர்தல்
புணர்தலை,
நீடு
நின்ற
நிறைபுக
ழாய்ச்சியர்,
கூட
லைக்குழற்
கோதைமுன்
கூறிய,
பாடல்
பத்தும்வல்
லார்க்கில்லை
பாவமே. (2) 11
5: மன்னு
பெரும்புகழ்
எழுசீர்க்
கழிநெடிலடி
ஆசிரிய
விருத்தம்
545:
மன்னு
பெரும்புகழ்
மாதவன்
மாமணி
- வண்ணன்
மணிமுடி
மைந்தன்
தன்னை,
உகந்தது
காரண
மாகஎன்
- சங்கிழக்
கும்வழக்
குண்டே,
|